search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கட் பிரபு"

    • அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.
    • ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.

    ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெரும் சத்தத்தை வைத்தே திகிலாக காட்சிப் படுத்தியுள்ளன. சப்தம் திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ’ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
    • தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ’சப்தம்’ படத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

    ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

    தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய்  ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது  படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.. 

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய்  சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. நேற்று வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

    இன்று கோட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் விஜய் ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டியபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது.
    • வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின் நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.

    இந்நிலையில் தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஷ்வர்யா கல்பாத்தி இருவரும் வெங்கட் பிரபுவை கேள்வி கேட்குமாறு கை சைகையில் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு தலையில் பேஸ்பால் பேட் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வைத்துள்ளார். வெங்கட் பிரபு இருவரையும் கையெடுத்து கும்பிடுகிறார். இவ்வாறு அந்த காட்சி அமைந்துள்ளது.

    இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
    • இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

    இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

    ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.

    இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.

    பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.

    காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார்.

    நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். பின் இப்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

    இந்நிலையில் விஜய் சாய் பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு பணிப்புரியும் குருக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த். பின் பல முன்னணி படங்களில் நடித்து இருக்கிறார்.

    தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்பொழுது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரஷாந்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் குழு சார்பாக வாழ்த்தி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
    • கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நான்கு நாட்களாக மிதந்தார் விஜய். அவர் கேரளாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து ரசிகர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர்.

    அவர்களின் அன்பை பெற்ற விஜய், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து வந்தார். கேரளாவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு கூட கேரள ரசிகர்களை விஜய் சந்த்தித்து பேசினார்.

    அவரின் மனமார்ந்த நன்றியை மலையாலத்திலேயே கேரள ரசிகர்களிடம் கூறினார். படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் மற்றும் படக்குழு சென்னை திரும்பினர். அடுத்த கட்டமான படப்பிடிப்பை ரஷ்ஷியாவின் தலை நகரமான மாஸ்கோவில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் வெங்கட் பிரபு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன்," தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் போஸ்டர் ஷூட்டின் போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் நடிகர் விஜய்க்கும் அதை எடுத்த புகைப்பட கலைஞரான சுதர்ஷனுக்கும் நன்றியை  தெரிவித்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
    • ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பட்டையை கிளப்பியது. லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு கேரளா வந்த நடிகர் விஜய்-க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கியிருக்கும் இடங்களில் தினந்தோரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.

     


    ரசிகர்கள் வருகையை அடுத்து நடிகர் விஜய், அவர்களை சந்தித்து வந்தார். ரசிகர்கள் விஜய்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    இந்த நிலையில், கேரள ரசிகர்களுக்காக நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலையாளிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை எக்ஸ் பதிவில் இணைத்துள்ளார்.


    இந்த பதிவில், "எனது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள்! எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது
    • இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார்

    கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் 4 நாட்கள் படப்பிடிப்புக்காக 9 வருடங்களுக்கு பிறகு கேரளா சென்றார்.

    கேரளாவில் அவர் இறங்கியதில் இருந்து ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்த் வண்ணம் உள்ளனர்.

    கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விஜய் ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரள ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாசலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் மணிக்கணக்காக இரவு பகல் பாராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ரசிகரின் குழந்தையை விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ வைரலானது, மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலாகியது.

    இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார். கிளம்பும் முன் கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். அவர் ரசிகர்களுடன் பேசும் பொழுது தமிழ்நாடும் கேரளாவும் என் இரு கண்கள் மாதிரி என குறிப்பிட்டுள்ளார். பின் கேரள ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி என வணங்கி கூறினார்.

    பின் அவர் ரசிகர்களை சந்திக்கும் பொழுது போது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
    • பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் படம் GOAT. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

    தற்பொழுது படக்குழுவினர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். கேரள படப்பிடிப்பை அடுத்து ரஷ்யாவின் தலை நகரமான மாஸ்கோ நகரத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.

    9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரள மண்ணில் படப்பிடிபிற்காக காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேரள விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர். அவர் படப்பிடிப்புத்தளம் செல்லும் வரை அவர் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

    நேற்று ரசிகர்களை காண சென்ற விஜையை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டனர். பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் மாற்றுதிறனாளி ரசிகருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×